முறைகேடான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது வழக்குத்தாக்குதல்.

யாழ்ப்பாணம்: யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் பருத்தித்துறை, நல்லூர் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலை தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் விலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன் முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.