புதுக்குடியிருப்பில் வீட்டு வளாகத்தில் குண்டு வெடித்து ஒருவர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் வீட்டு வளாகத்தில் குண்டு வெடித்ததில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த துன்பியல் சம்பவம் (15) மாலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை 05 ஆம் வட்டாரப்பகுதியில் வீட்டுகாணியினை துப்பரவு செய்து தீ மூட்டியபோது குறித்த குண்டு வெடித்துள்ளது.

இதன்போது 66 அகவையுடைய வயோதிப பெண்மணி ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேலும் இதனுடன் தொடர்புடைய ஏதாவது தடயவியல் உள்ளதா என்பதை அறியும் பொருட்டு ஆய்வு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.