மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க உத்தேசம்.

தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளை மீறுவது அவதானிக்க கூடியதாக இருப்பதாகக் சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல், சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி ,இவ்வாறான விதிகள் தொடர்ந்து மீறினால், பயணக் கட்டுப்பாட்டை மேலும் ஒன்று அல்லது இரு வாரங்களுக்கு நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் எவ்வாறாயினும், புதிதாக இனங்காணப்பட்டும் தொற்றாளர்களின எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட குறைவாக இருப்பதாகவும், ஆனால் எண்ணிக்கையை வைத்து இறுதி முடிவுக்கு வர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.