30 ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் திருட்டு! – தீவிர விசாரணை ஆரம்பம்.

காலி – ஹபராதுவ பகுதியில் சீனத் தயாரிப்பான ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 30 தடுப்பூசிகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன எனவும், அவற்றின் பெறுமதி 90 ஆயிரம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியால் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றிய சாரதி மற்றும் ஊழியர் ஒருவர் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்வதற்கு காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால், காலி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.