தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதற்காக மு.க.ஸ்டாலின் காலை 7:30 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன்போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி, நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், செங்கல்பட்டில் கொவிட் தடுப்பூசி உற்பத்தி என பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ,அதனைத் தொடர்ந்து நாளைய தினம் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, மற்றும் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.