ஜனாதிபதி , விமலின் வசமிருந்த நிறுவனத்தை பறித்து மஹிந்தானந்தாவிடம் கொடுத்துள்ளார்

விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இதுவரை இயங்கி வந்த லங்கா பொஸ்பேட் நிறுவனம் விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ஜனாதிபதியின் வியத்கம – பசில் அணியினருக்கும், விமல் – கம்மன்பில அணியிருக்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், விமல் வீரவங்சவின் அமைச்சின் நிறுவனமொன்றும் பறிக்கப்பட்டு , மஹிந்தானந்த அலுத்கமகே வசம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒப்படைத்துள்ளார்.

தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.