மாணவர்களுக்கு இணைய வசதி வழங்க அரசு தீர்மானம்!

பாடசாலை மாணவர்களுக்கு இணைய வசதி மற்றும் ‘ரப்’ ஆகியவற்றைப் பெற்றுக்கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் மாணவர்கள் இணையமூடனான கல்வியை எளிதில் அணுகுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அரசு இன்று வெளியிடும் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைய கல்வியில் சிரமப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இணையம் மற்றும் தகவல்களை வழங்கும் திட்டம் தொடர்பில் அரசு செயற்பட்டு வருகின்றது என அமைச்சர் நாமல் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.