கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தும் புதிய அனிமேஷன் DOODLE அறிமுகம் செய்த கூகுள்!

இன்றைய கூகுள் டூடுல் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு மக்களை நினைவூட்டும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக தங்கள் மக்களை தடுப்பூசி எடுத்து கொள்ளுமாறு உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கொடூர வைரஸ் தொற்றிலிருந்து தங்களையும், சமூகத்தையும் பாதுகாக்க மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று கூகுள் நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இதற்காக தனது சர்ச் என்ஜின் பேஜில் தடுப்பூசி இயக்கத்தை ஊக்குவிக்க அனிமேஷன் செய்யப்பட்ட டூடுலை வைத்துள்ளது.

கோவிட் -19 வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு மக்களை வலியுறுத்தும் வகையில் இந்த டூடுலை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. கூகுள் டூடுல் என்பது கூகுள் சர்ச் எஞ்சினின் முகப்புப்பக்கத்தில் கூகுளின் நிரந்தர லோகோவுக்கு பதிலாக சிறப்பு சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக தோன்ற வைக்கப்படும். முக்கிய விழாக்கள், பிரபலங்களின் சாதனைகள் மற்றும் பிறந்தநாள் மற்றும் விடுமுறை நாட்களின் சிறப்பை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு அனிமேஷன்கள் மூலம் கூகுள் நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்படுவது ஆகும்.

தற்போதுள்ள நெருக்கடி சூழலில் கோவிட் தடுப்பூசிகள் தான் தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய ஆயத்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் மக்களிடையே நிலவும் அச்சம் மற்றும் தயக்கம் காரணமாக இன்னும் பலர் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் உலக நாடுகளின் தடுப்பூசி பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக புதிய அனிமேஷன் டூடுலை அறிமுகப்படுத்தி உள்ள கூகுள், “கோவிட் -19 தடுப்பூசிகள் புழக்கத்தில் இருக்கின்றன. அதை போட்டு கொள்ள தேவைப்படும் தகுதி அறிய தேசிய சுகாதார சேவை வழிகாட்டுதல்களை (NHS) பாருங்கள்” என்று கூகுள் சர்ச் என்ஜின் கூறியுள்ளது.

கூகுள் தற்போது அறிமுகப்படுத்தி உள்ள டூடுலில் இருக்கும் அனிமேஷன் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள், மாஸ்க்குகளை அணிந்து கொண்டு, தடுப்பூசிகள் மற்றும் கோவிட் -19 முறையான நடத்தை எவ்வாறு வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்பதற்கான செய்தியை மக்களுக்கு விளக்குகிறது. Google அனிமேஷன் லோகோ டூடுலில் இருக்கும் அனைத்து எழுத்துக்களும் அறுவை சிகிச்சை மாஸ்குகளை அணிந்து, தடுப்பூசி மையத்தில் வரிசையில் நிற்கிறது. கடைசி எழுத்தான E-ஐ ஒரு சுகாதாரப் பணியாளர் போல இந்த டூடுல் சித்தரித்துள்ளது. மற்ற எழுத்துக்களுக்கு E தடுப்பூசி போடுவது போலவும், அவை அனைத்தும் மாஸ்க் அணிந்திருப்பதை போலவும் அனிமேஷன் செய்யப்பட்டு உள்ளது.

உலகளவில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி போட்டு நேற்று இந்தியா சாதனை படைத்த பிறகு இந்த டூடுல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 85.15 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன. தடுப்பூசி மையத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் தொற்று நோயைத் தடுப்பதற்கான வழிகள் குறித்த கூகுள் தேடல் முடிவுகளுடன் இந்த புதிய டூடுல் லிங்க் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.