கொரோனாத் தொற்று உச்சமடைந்தால் கடும் பயணக் கட்டுப்பாடு! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை.

“கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின், பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும்.”

இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எனவே, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் எனவும், இயலுமானவரை வீடுகளிலிருந்து பணிபுரியுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும் எனவும் அவர் எதிர்வு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.