ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இழப்பை இலங்கை தாங்குமா? – அஜித் நிவாட் கப்ரால் பதில்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நீக்கும் சவாலை எதிர்கொள்ள இலங்கை அரசு தயாராகுகின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் நிலைமை ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குறித்த வரிச் சலுகை நீக்கப்படும்போது எதிர்கொள்ள நேரிடும் சவால்களையும் விளைவுகளையும் அரசு மதிப்பாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், நாம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றோம்.

அரசும் மத்திய வங்கியும் இணைந்து நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்ற உறுதிப்பாட்டை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு நாம் வழங்குகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.