யாழ்.மாவட்டத்தில் 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்குத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 34 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேருக்கும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேருக்கும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 02 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.