நாட்டில் மேலும் மூவருக்கு டெல்டா தொற்றா?

கட்டுமான பணியில் ஈடுபடுகின்ற மேலும் மூவருக்கு கொவிட் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டனர். எனினும் அவர்களுக்கு டெல்டா தொற்று இருப்பது இன்னும் உறுதி செய்யவில்லை என கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அதன்படி ,பரிசோதனையின் முடிவு கிடைக்கப்பெற்ற பின்னரே டெல்டா தொற்று பற்றிய உண்மைத் தன்மையை அறிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார் .

மேலும் கட்டுமானப்பணியில் ஈடுபடுகின்ற 46 பேரில் செய்த பரிசோதனையில் 6 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.