பஸிலின் நாடாளுமன்ற வருகை காலதாமதம்!

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனக் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதாக இருந்தால் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் பதவி துறக்க வேண்டும். அதன்பின்னர் பஸிலின் பெயர் பரிந்துரைக்கப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட வேண்டும்.

இவ்வாறான நடைமுறைகளால் இம்மாத நடுப்பகுதியிலேயே பஸில் நாடாளுமன்றம் வரக்கூடும் என ஆளுங்கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.