தாமரை மொட்டு’வின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில் கெட்டகொட கூறுகின்றார்

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் களமிறக்குவோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக எம்.பி. பதவியை இவரே துறந்தார். இந்நிலையிலேயே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பஸிலை நிச்சயம் கொண்டு வருவோம் என்ற அறைகூவலை அவர் விடுத்துள்ளார்.

நாட்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 இல் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.