கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி வாகனத்தின் மீது உடைந்து விழுந்ததில் சாரதி பலி.

வௌ்ளவத்த, சுவிசுந்தாராம வீதியில் நிர்மாணப் பணியில் இருந்த கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி வீதியில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வாகனத்தின் ஓட்டுனர் ஆசனத்தில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடுவலை பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.