சென்னையில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

சென்னை நகரின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், புரசைவாக்கம், பெரியமேடு, ஓட்டேரி, அம்பத்தூர், அமைந்தகரை, போரூர், ராமபுரம், ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகரான பூவிருந்தவல்லி, திருமுல்லைவாயில், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.