வல்வை ஆதிகோயிலடியில் 48 பேருக்குக் கொரோனா!

யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 39 பேர் உட்பட இரண்டு நாள்களில் 48 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எழுமாற்றாக 156 பேரிடம் பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் 32 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 9 பேருக்குத் தொற்றுள்ளமை பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.