யாழில் 9 மாத குழந்தையையும் சாகடித்தது கொரோனா.

யாழ்., சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது மாதப் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கொரோனாத் நோய்த் தொற்றுள்ளமை சடலத்தில் மீதான பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை திடீர் சுகயீனம் காரணமாக நேற்று சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.

எனினும், அங்கிருந்து நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

முதலாவது பி.சி.ஆர். பரிசோதனையில் மூலக்கூறுகள் போதாது எனத் திருப்பப்பட்டது. மீண்டும் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் குழந்தைக்குக் கொரோனா நோய்த்தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்த முதலாவது குழந்தை இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.