இராணுவத்தினரால் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

யாழ் குடாநாட்டில் கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பொது மக்கள் அதிகமாக நடமாடும் யாழ் மின்சார நிலைய வீதி பகுதி ராணுவத்தினரால் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டதோடு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

யாழ் குடாநாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் ராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இராணுவத்தின் 512 வது பிரிகேட் படையினரார் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.