மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவிய 5 பெண் ஆசிரியைகள் வீட்டை பூட்டி விட்டு தப்பியோட்டம்!

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.

மாணவிகள் கொடுத்த பாலியல் தொல்லை புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்றபோது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் தப்பி ஓட்டம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகளை 5 பேருக்கு சம்மன் அளிக்க சென்றபோது உண்மை தெரியவந்துள்ளது.

மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியை காயத்ரி மற்றும் அங்கு பணிபுரியும் பிரவீனா உள்ளிட்டோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க சம்மனை வாங்காமல் தலைமறைவாகியுள்ளனர்.

வீட்டை பூட்டி கொண்டு அவர்கள் தப்பியோடியது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.