UNPயினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினால் மாத்திரமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமென கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்து அதற்கு பெற்றுக்கொண்ட பணத்தை செலுத்த முடியாதிருந்த வேளையில் ஐக்கிய தேசிய கட்சி அதனை இலங்கை சீன, கூட்டுவர்த்தக நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்தது.

இதனால் தற்போது அந்த கடனை நாம் செலுத்தவேண்டிய தேவையில்லை. அதனை அந்த கம்பனியே செலுத்தியது.

அந்த பணம் இலங்கைக்கு கிடைத்தது. இல்லையேல் அந்த சுமையை பொதுமக்களே சுமக்க வேண்டியிருந்திருக்குமெனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

Comments are closed.