14 மாவட்டங்களுக்கு காற்று தொடர்பான சிவப்பு எச்சரிக்கை.

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு பலத்த காற்று தொடர்பான சிவப்பு எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இதன்படி சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மாகாணங்களிலும் – ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 – 70 வரை வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.