தொடர்மாடி குடியிருப்பில் சற்று முன்னர் பரவிய தீ.

கொழும்பு − கொட்டாஞ்சேனை தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் சற்று முன்னர் தீ பரவியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை − மேபீல்ட் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றின் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே, இந்த தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

தமது இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த தீ பரவலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.