பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பெற்றோரிடம் கோரிக்கை.

வறுமை காரணமாக தமது பிள்ளைகளை பணியாளர்களாக கடமைகளுக்கு அனுப்பி வைத்திருப்பீர்களானால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி ,பணியாளர்களாக கடமையாற்றி வரும் தமது பிள்ளைகளுக்கு எவரேனும் இடையூறுகளை விளைவிப்பாளர்களாயின், அது தொடர்பில் அமைதியாக இருக்காது, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ,பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறார்களை கண்டறியும் நோக்குடன் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.