ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோரை 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய ,சந்தேகநபர்கள் நால்வரும் இன்று(24) கொழும்பு புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.