யாழ் குருநகர் பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது

யாழ் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த இக் கைது தொடர்பில் மேலும் தெரியவருவது:-

குருநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை பொலீசார் சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் பக்கெட்டுக்கள் இரு நபர்களிடமும் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று பொலீசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு மற்றும் கல்வியங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

Comments are closed.