அங்குலான சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குழப்பம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தினை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கல்வீச்சினை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தோடு தொடர்புடைய 9 பெண்கள் உள்ளிட்ட 14 பேர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்களுக்கு பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை ஒக்டோபர் மாதம் 23ம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.

Comments are closed.