இந்தியாவின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தினை தாண்டியுள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையை கடந்த மூன்றாவது நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் மணர விகிதமும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றினால் இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

இந்தியாவின் டில்லி நகரிலேயே கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதாகவும் சுகாதார பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் வீரியமடைந்தால் உலகம் முழுவதும் 256 மில்லியன் பேர் வரை பட்டினியினால் பாதிப்படையக்கூடுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments are closed.