மாடு கடத்தல் முறியடிப்பு.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மாடு கடத்தப்பட்டமை இன்று முறியடிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை நகரப் பகுதியில், கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி, சூட்சமமான முறையில், கூலர் வாகனத்தில், அனுமதிப் பத்திரமின்றி இறைச்சிக்காக கால்நடைகளை ஏற்றி வந்தவர், பளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் 9 மாடுகளைக் கூலர் வாகனத்தில் ஏற்றி வருகின்றார் என்று பளைப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பளை நகரப் பகுதியில் வைத்து, குறித்த வாகனத்தைப் பொலிஸார் பரிசோதித்த வேளை 9 மாடுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.