கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் நீர்வெட்டு

கொழும்பை அண்டியுள்ள பல பகுதிகளில் இன்றைய தினம் 2 மணி முதல் 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி ராஜகிரிய, மொரகஸ்முல்ல, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் ஜாஎல ஆகிய பகுதிகள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு 11,12 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்துடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Comments are closed.