கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக அரச பஸ் சேவையாளர்கள் கவனயீர்ப்பு.

அரச பஸ் சேவையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

தனியார் பஸ் சேவையினருடனான முரண்பாடு காரணமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பஸ்களை நிறுத்தி அவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பஸ் சேவையினருக்கு இடையில் 3 நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று முழங்காவில் பகுதிக்கான அரச பஸ் சேவையை இடைநிறுத்தி கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரச்னைக்கான தீர்வு வழங்கப்படாதவிடத்து, எதிர்வரும் 4ஆம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி சாலையிலிருந்து வேவைகளை இடைநிறுத்தி தொடர் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என ஊழியர்கள் குறிப்பிட்டனர்.

இந்தநிலையில், அக்கராயன், ஜெயபுரம் ஊடாக முழங்காவில் பகுதிக்கான சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.