450 கிலோ கேரள கஞ்சாவுடன் மாதகல் கடலில் மூவர் கைது!

யாழ்ப்பாணம், மாதகல் கடற்பரப்பில் வைத்து 450 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து குறித்த படகில் கேரள கஞ்சா கடத்தி வரப்படுகின்றது எனக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்திருந்த கடறபடையினர் படகை மடக்கினர்.

இதன்போது படகில் இருந்து 450 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் படகில் இருந்த மூவரும் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.