பல பிரதேசங்களில் பால் மாவுக்குத் தட்டுப்பாடு!

இலங்கையின் பல பிரதேசங்களில் பால் மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உள்ளூர் சந்தையில் பால் மாவுக்குத் தட்டுப்பாடுகள் நிலவுகின்றது.

பால் மா நிறுவனங்கள் விலை அதிகரிப்புக்கு அனுமதி கோரியிருந்த நிலையில் அதற்கு அனுமதி வழங்காத நிலையிலேயே இந்தத் தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்படி சிறுவர்களுக்கான பால் மா தவிர்ந்த மற்றைய அனைத்து வகை பால் மாவுக்கும் தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.

இதேவேளை, சில பிரதேசங்களில் ‘லாப்’ சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.