சீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம் அருகே பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், பூரண மது விலக்கு வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பூரண மது விலக்கு வேண்டியும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் சீராப்பள்ளி பேரூர் தலைவர் கதிர்வேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.