சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சற்றுநேரத்தில் வெளியீடு

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாத நிலையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை, பருவத் தேர்வுகளின் அடிப்படையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.