துறைமுக ஆணையத்தில் 600 பேருக்கு கொரோணா என்பது தவறான தகவல் : துறைமுக அதிகாரசபை

இலங்கை துறைமுக ஆணையம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் கொழும்பு துறைமுக அதிகார சபையில் உள்ள 600 ஊழியர்கள் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானவை எனக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 9000 ஆகும், அதில் உள்ள 31 ஊழியர்களே கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை அதில் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், துறைமுக ஊழியர்களின் , பி.சி.ஆர். சோதனைகள் சீரற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டன எனவும் , அதன்போது 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.