யாழில் தொற்றாளர்கள் அதிகரிப்பு; நேற்று 174 பேருக்குக் ‘கொரோனா’ (Video)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று மாத்திரம்174 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை கொரோனாவைப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தால் இன்று வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 17 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 29 பேருக்கும் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 02 பேருக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.