கொழும்பில் உள்ள வீடுகளில் போலீசார் சோதனை

கொழும்பில் வாழும் கோவிட் தடுப்பூசி பெறாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது அத்தகையவர்களை கொழும்பில் உள்ள சுகததாஸ மைதானத்திற்கு அழைத்து வந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (07) தொடங்கப்பட்டுள்ளது என மூத்த டிஐஜி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

ஸ்ரீலங்கா சமூக பொலிஸ் குழுக்கள் , சுகாதார ஆணையம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் உதவியுடன் அவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரை, ஏறத்தாழ 5,000 பேர் சுகததாச விளையாட்டரங்கத்திற்கு சமூக போலீஸ் குழுக்களின் தலையீட்டில் தடுப்பூசிக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மற்றும் கொழும்பில் ஒரு டோஸ் பெறாதவர்கள் சுகததாஸ மைதானத்திற்கு விரைவில் வந்து முதல் தடுப்பூசியை பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.