வந்தாறுமூலையில் ஏற்பட்ட விபத்தில் மூவர் வைத்தியசாலையில்…

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் வந்தாறுமூலை பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

மழை பெய்துகொண்டிருக்கும் தறுவாயிலே எதிரெதிரே பயணித்துக்கொண்டிருந்த சிறியரக லொறியும் பிக்கப் வண்டியொன்றும் மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.