மூன்றாவது தடுப்பூசி குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை! – இராணுவத் தளபதி தெரிவிப்பு.

“எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.”

இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.