நாட்டை முடக்குதல் தொடர்பில் இன்னும் எந்த முடிவும் இல்லை திருமண நிகழ்வில் 50 பேருக்கே அனுமதி இராணுவத் தளபதி.

“நாட்டை முற்றாக முடக்குதல் அல்லது நாடளாவிய பயணக் கட்டுப்பாடுகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.”

இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும்.

அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு எவரும் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

முன்னர் பரிந்துரைக்கப்பட்ட திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை 150 பேரில் இருந்து 50 ஆக மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.