கொரோனா : ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள்

நேற்று (09) கொரோனா தொற்று காரணமாக 118 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இது ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஆகும்.

இறந்தவர்களில் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட 17 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 101 பேரும் அடங்குவர்.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,340 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.