லங்காஈநியூஸ் எழுத்தாளர் CCDயினரால் கைது (Update)

கண்டி வாசியான ,  லங்காஈநியூஸ் இணையதள பத்தி எழுத்தாளரான  கீர்த்தி ரத்நாயக்க  தவறான தகவல்களை இணையத்தளத்தில் பதிவிட்டதாகக் கூறி ,  கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.

நாளை இந்திய சுதந்திர தினத்தன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அவர் எழுதிய கடிதத்தை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை விசாரிக்க இந்திய தூதரக அதிகாரி போலீசில் அளித்த புகாரை அடுத்து இந்த கைது இடம் பெற்றுள்ளது.

முன்னாள் விமானப்படை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து லங்கா ஈநியூஸ் இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.