நேற்று கோவிட் தொற்று காரணமாக 160 பேர் உயிரிழந்துள்ளனர்

நேற்றைய தினம் கோவிட் தொற்று காரணமாக 160 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொரோனா இறப்பு இதுவாகும்.

இதுவரை இலங்கையில் பதிவான கோவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 87 ஆண்களும் 73 பெண்களும் அடங்குவர்.

30-59 வயதிற்குட்பட்டவர்கள் 30, 35 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் என 124 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.