கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவருக்குக் கொரோனா!

ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் அவரை நீதிமன்றத்தின் உத்தரவில் சிறைச்சாலை ஊடாக இடைத்தங்கல் முகாமில் சேர்க்கவும், ஏனைய இருவரையும் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவு கடற்கரையில் கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின்போது, வாகனம் ஒன்றில் ஏற்றி கடத்த முற்பட்ட ஐஸ், கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டன. அவற்றைக் கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மாங்குளம், கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றபோது முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.