முகக்கவசம் அணியாதோர் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள்…

முகக்கவசம் அணியாதோரை கைது செய்வது தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய ,பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ,கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 151 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.