கொரோனாவின் தீவிரத்தால் வெயாங்கொடையில் கடைகளுக்குப் பூட்டு!

கம்பஹா மாவட்டம், வெயாங்கொடையில் உள்ள அனைத்துக் கடைகளையும் ஒரு வாரத்துக்கு மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என வெயாங்கொடை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய வெயாங்கொடை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அனைத்துக் கடைகளும் இன்றிலிருந்து மூடப்பட்டுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி வரை குறித்த கடைகள் மூடப்பட்டிருக்கும்.

வெயாங்கொடைப் பகுதியில் அதிக கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகுகின்றனர் எனவும், தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாகக் கடைகளை மூடுவதற்கு வர்த்தகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது எனவும் அதன் தலைவர் எஸ்.ஐ.எஸ். வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.