மேலும் ஒரு இலட்சம் ‘பைசர்’ தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு!

அமெரிக்காவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்துள்ளன.

அதன்படி, ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று அதிகாலை இந்தத் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

460 கிலோகிராம் நிறையுடைய 13 பெட்டிகளில் குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவை பாதுகாப்பாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, இதற்கு முன்னர் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ் பைசர் தடுப்பூசிகள் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.