பாகிஸ்தான் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்வியினை மேற்கொள்வதக்கான புலமைபரிசில்.

கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் முன்னெடுக்கப்படும் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வியினை மேற்கொள்வதக்கான அல்லமா இக்பால் புலமைப்பரிசில் தெரிவுக்கான போட்டிப் பரீட்சை கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்ட கொழும்பு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹத் மற்றும் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அலுவலகத்தின் கல்விப் பிரிவின் ஆணையாளர் ஜன்சீர் கான், கண்டி வர்த்தக பாக்கிஸ்தான் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டதையும் மத்திய , ஊவா, வடமேல், வடக்கு, வட மத்திய, சப்ரகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய குறிப்பிடதக்கது.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.