பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது – நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரியைக் குறைக்குத் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து, நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை. மக்களின் கவலை ஏற்படையதே, ஆனால் மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை.

முந்தைய காங்கிரஸ் அரசு, 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு எரிபொருள் விலையைக் குறைத்தது. காங்கிரஸ் அரசு செய்த தந்திரத்தால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. ஆகவே தான் பெட்ரோல், டீசலின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை.

காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால், நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70.195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி கட்டி உள்ளது. 2020க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும்.

முன் தேதியிட்ட வரிச் சட்டத்தை நீக்கி, புதிய சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து, அதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். நடப்பு நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கிற்குள் நாட்டின் பணவீக்கம் இருக்கும்.

சில மாதங்களாக ஜி.எஸ்.டி., மற்றும் நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் வருவதால், தேவைகளும், கடன் வளர்ச்சியும், வரி வருவாயும் அதிகரிக்கும்” இவ்வாறு கூறினார்.

கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மாநில அரசு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 3 ரூபாய் விலைக் குறைப்பு செய்து அறிவித்தது. அன்று இரவு முதலே அந்த விலைக் குறைப்பு நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.